தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பசுபதி கோவில் பிள்ளை மங்கை கோவில் தெருவில் விஜய்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த 27-ஆம் தேதி இரவு மாத்தூர் பட்டி தோப்பு பகுதி மது கடைகளில் விஜய் நண்பருடன் சேர்ந்து மது வாங்கியுள்ளார். இதனையடுத்து சூலமங்கலம் ராயல் கார்டன் மனைப்பிரிவில் முகத்தில் ரத்த காயங்களுடன் விஜய் இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விஜயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விஜயை அடித்துக் கொன்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.