அருணாச்சல பிரதேச மாநிலத்தை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக சேர்த்து சீனா வரைபடம் வெளியிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அக்சய் சீன் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சேர்த்து சீனா வரைபடம் வெளியிட்டுள்ளது. தைவான் மற்றும் பிரச்சனைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சீனா சேர்த்துள்ளது.

அண்மையில் அருணாச்சலில் உள்ள 11 இந்திய பகுதிகளுக்கு சீனா புதிய பெயரை சூட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மீண்டும், அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டுடன் இணைத்து சீனா வரைபடம் வெளியிட்டுள்ளது.