இந்தோனேசிய நாட்டில் உள்ள சுமத்ரா தீவில் அமைந்திருக்கும் மராபி மலை நேற்று காலை மீண்டும் வெடித்துள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறிய தீ குழம்பு அருகில் இருந்த கிராமங்களை பாதித்துள்ளது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த 150 க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் இதே போன்று மராபி மலையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டபோது 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.