தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் 25 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் அண்மையில் வீடு திரும்பிய நிலையில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் வீடு திரும்பிய விஜயகாந்த் மீண்டும் தற்போது சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தேமுதிக தலைமை கூறியுள்ளது. மேலும் நாளை மறுநாள் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.