மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பிஷ்ணுபூர், நரன்சேனா பகுதியில் மத்திய ரிஜர்வ் போலீஸ் போர்ஸ் (CRPF) மீது குக்கி இன கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். நடு இரவில் இருந்து 2:15 மணி வரை நடந்த இந்த தாக்குதலில் 2 சிஆர்பிபிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் சிஆர்பிஎஃப் 128 பெட்டாலியனுக்கு சேர்ந்த ஊழியர்கள் என்று மணிப்பூர் போலீசார் தெரிவித்தனர். மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குபதிவின் போது வாக்குச்சாவடிகளில் தாக்குதல் நடந்ததால் அங்கு மறு வாக்குப்பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது.