நடிகர் அஜித்குமாரை ‘அமராவதி’ மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சோழா கிரியேஷன்ஸ் நிறுவனர் பொன்னுரங்கம், AK ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 1993ல் வெளியான அமராவதியின் 30வது ஆண்டை கொண்டாடும் வகையில் வரும் மே 1 ஆம் தேதி உயர் தொழில்நுட்ப வடிவில் படத்தை மீண்டும் மறு வெளியீடு செய்யப்படுகிறது. அதற்கு ரசிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென சோழா பொன்னுரங்கம் வேண்டியுள்ளார்.

கடந்த 1993-ஆம் ஆண்டு, சோழா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் அஜித்குமார் தமிழில் அறிமுகமான திரைப்படம் அமராவதி. மே 1-ஆம் தேதி, அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, மீண்டும் இத்திரைப்படத்தை மறு வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தென்னிந்தியா முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.