தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கேஜிஎப் படம் புகழ் பிரசாந் நீல் இயக்கத்தில் பிரபாஸோடு சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ரூ.3 லட்சம் செலவிட்டு சாதாரண கை பை வாங்க பயன்படுத்த மாட்டேன் என கூறியுள்ளார்.

ஆடம்பர பொருட்கள் பற்றி பேசியுள்ள நடிகை ஸ்ருதிஹாசன், ‘பைக்கு 3 லட்சம், செருப்புக்கு 50 ஆயிரம் என செலவிட்டால் என்ன ஆவது? இந்த உண்மையை நான் உணர்ந்தபோது, ​​என்னால் அதைச் செய்ய முடியாது என்பதில் உறுதியாக இருந்தேன். இதுவே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது’ என்று கூறியுள்ளார்.