சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து விவசாயிகள் சங்கத்தினர் சார்பாக ஊர்வலம் நடைபெற்றது. அதாவது மத்திய அரசு அறிவித்த  கொள்முதல் விலை வழங்க வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட செயலாளர் காமராஜ், தலைவர் வீரபாண்டி போன்றோர் தலைமை தாங்கியுள்ளனர். மேலும் மாநில துணைத்தலைவர் முத்துராமு ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த ஊர்வலத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் அண்ணாதுரை, ஆறுமுகம், மாவட்ட செயலாளர் மோகன், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜெயராமன், அழகர்சாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, துணை செயலாளர் கோபால் மற்றும் மணி, மருது உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.