சென்னையில் கனமழையால் பாதிக்கப்படுவோர் தங்களுக்குள்ள பிரச்சனைகள் மற்றும் தேவைப்படும் உதவிகளை தனது x பக்கத்தில் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவிட்டுள்ளார். போரூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் உதவி கோரலாம் என்று கூறியுள்ளார். பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் உணவு இல்லாமல் தவிக்கும் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.