மிக நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற ஆசை உலகில் வாழும் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஒரு காலத்தில் மனிதனுடைய சராசரி இறப்பு வயது என்பது 60 ஆக இருந்தது. ஆனால் தற்போது காலகட்டத்தில் 30 வயது கடப்பதே பெரும் போராட்டமாக இருக்கிறது. சிறுவயதிலேயே பலரும் மாரடைப்பால் இறந்து விடுகிறார்கள் .ஆனால் ஒரு சில நாடுகளில் பலரும் நூறு ஆண்டு வரை வாழ்கிறார்கள். சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை அதிக ஆயுட்காலம் உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி,

மொனாகோ: இந்த நாட்டில் வாழும் மக்கள் வயது சராசரியாக 87 வருடங்கள். இங்குள்ள மக்கள் இயற்கைக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இவர்களுக்கு சுகாதார வசதிகள் மிக அதிகம் .எனவே ஓய்வுக்கு பிறகு தங்குவதற்கு சிறந்த இடங்களில் இது ஒன்று.

ஹாங்காங் : இந்த நாட்டில் மக்களின் சராசரி வயது 85.83 வருடங்கள் வாழ்கிறார்கள். புவியியல் புயல்கள் கடுங்குளிர், அதிக வெப்பம் போன்ற பல தீவிரமான நிகழ்வுகளை தடுப்பதால் நோய்கள் குறைகின்றன. பணக்கார நாடான இங்கு மூத்த குடிமக்களுக்கு பல திட்டங்கள் உள்ளது.

மக்காவ்: இந்த நாட்டில் மக்கள் சராசரி வயது 85.51 வருடங்கள் .இங்கு 1.4 சதவீதம் மட்டுமே விபத்துகளில் உயிர் இழப்பு நடக்கிறது. சூரிய உதயத்திற்கு முன் எழுவதும், சூரிய அஸ்தமத்திற்கு பின் தூங்குவதும் இங்குள்ள மக்களுடைய வாழ்க்கை முறை. மேலும் இங்கு முதியோர்களுக்கு இலவச மருத்துவமும் கொடுக்கப்படுகிறது.

ஜப்பான்: இந்த நாட்டில் வாழும் மக்களின் சராசரி வயது 84.95 ஆண்டுகள்.. இங்குள்ளவர்கள் நின்று கொண்டு வேலை செய்கிறார்கள். நோய்களை எதிர்த்து போராடுவதை தவிர ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்திருப்பதால் வயதானதை தடுக்க ஒரு நாளைக்கு பலமுறை தேநீர் குடிப்பார்கள். உடற்பயிற்சி என்பது இவர்களுடைய வாழ்க்கை முக்கிய அங்கம்.

லிச்சென்ஸ்டீன்: இந்த நாட்டில் வாழும் மக்களின் வயது 84.77 ஆண்டுகள். இங்கு மிக குறைந்த வரி, எளிமையான அமைப்பு கடுமையான வங்கி சட்டம் போன்ற காரணத்தால்  உலகம் முழுவதும் மக்கள் இங்கு பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். இங்கு வசிக்கும் மக்களுக்கு பல வகையான வசதி இருக்கிறது. ஓய்வுக்கு பிறகு வாழ்வதற்கு ஏற்ற இடங்களில் இதுவும் ஒன்று.