தமிழகத்தில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு முன்னதாக மார்ச் 21ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாலை ஐந்து மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு கொறடா கோவி.செழியன் கூறினார்.