மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வசூலில் இருந்து டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு கொடுப்போம் என்று நடிகர் விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் மார்க்கண்டனை திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் தற்போது படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதை தொடர்ந்து விஷால் கொடுத்த வாக்கை மீண்டும் உறுதி செய்து இருக்கிறார். அதாவது நிச்சயமாக விவசாயிகளுக்கு பணத்தை வழங்குவோம் என்ற அவர் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.