தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தனியார் துறைகள் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 4-ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் நிலையில், 5000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8, 10, 12-ம் வகுப்பு படித்தவர்கள், ஐஐடி, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பட்டப் படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். அதன் பிறகு 18 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பில் கலந்து கொள்வதற்காக செல்லும் நபர்கள் சுயவிவரக் குறிப்பு, ஆதார் கார்டு, கல்வி சான்றிதழ் மற்றும் முகாமுக்கு முன்பதிவு செய்த நகல் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் இதற்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. நீங்கள் வேலைவாய்ப்பு தளத்தின் இணையதள முகவரிக்குள் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாம் மார்ச் மாதம் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதிகை பொறியியல் கல்லூரி, அதியூர், சேலம் மெயின் ரோடு மற்றும் திருப்பத்தூர் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.