தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனராகம் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடக்கும் இந்த தேர்வுக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் பிளஸ் 1 மாணவர்கள் இன்று முதல் அதாவது செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறும் 1500 மாணவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.