மத்திய அரசு சார்பாக பல ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்களுடைய 60 வயது வரை பணம் செலுத்தி இந்த திட்டத்தில் சேமிக்கலாம்.

பயனர்கள் செலுத்தக்கூடிய தொகையை பொறுத்து அவர்களது 60 வயதுக்கு பிறகு ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பென்ஷன் தொகை வழங்கப்படும். அதற்கு வங்கி கணக்கு அல்லது தபால் அலுவலக கணக்கு  இருப்பது கட்டாயம். இந்த திட்டத்தின் கீழ் மாதம் தோறும் 76 ரூபாய் அல்லது காலாண்டுக்கு 226 ரூபாய் அல்லது அரையாண்டுக்கு 449 ரூபாய் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.