ஏழை மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு தரப்பிலிருந்தும் மாநில அரசுகள் தரப்பில் இருந்தும்ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு தானியங்களைப் பெறலாம். அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்குக் கிடைக்கிறது. இந்நிலையி வட மாநிலங்களில் தகுதியில்லாத பல்லாயிரக்கணக்கானோர் போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி இலவச பொருட்களை வாங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அனைவரும் கை ரேகைகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. அதன்பேரில், உபி, பஞ்சாப் மாநிலங்களில் தகுதியில்லாத 1 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இனி மோசடிகள் தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.