உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த பேராசிரியர் மேடையிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் ஐஐடியின் பொறியியல் துறை தலைவர் சமீர் கன்டேகர்(55). இவர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தபோது மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.