’வந்தே மாதரம்’ பாடல் வெளியாகி 150 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் விதமாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளார். ‘சுதந்திரப் போராட்டத்தில் வந்தே மாதரத்தின் பங்களிப்பு’ போன்ற தலைப்புகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டுரை எழுதி அனுப்பலாம்.
இந்தக் கட்டுரைகளை மாணவர்கள் அடுத்த மாதம் (ஜனவரி) 31-ஆம் தேதிக்குள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவருக்கு ₹50,000, இரண்டாம் பரிசுக்கு ₹30,000, மூன்றாம் பரிசுக்கு ₹25,000 எனப் பெரிய அளவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
