நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது இன்று நடைபெற உள்ளது.  நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது.  நாடு முழுவதிலும் இருந்து 18.72 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தேர்வர்கள் காலை 11 மணியில் இருந்து தேர்வு மையத்துக்கு வரலாம், பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்படும் என்றுள்ளது தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.