தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  அதாவது மே 19 ஆம் தேதி வெளியாகிறது. ஆனால் தேர்வு முடிவை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட மாட்டார் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு ரிசல்ட் காலை 10 மணிக்கு, 11ஆம் வகுப்பு ரிசல்ட் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தேர்வு முடிவுகள் எஸ் எம் எஸ் மூலமாகவும் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.