நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக சந்திரயான்-3 தொடர்பான மாபெரும் வினாடி-வினா போட்டியை பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார். இந்த போட்டிகள் செப்டம்பர் 1 முதல் MyGov போர்ட்டலில் தொடங்கும் என்று அவர் கூறினார். மேலும் இது ஒரு சிறந்த வாய்ப்பு மற்றும் அனைத்து மாணவர்களும் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். “

இளைஞர்களுக்காக தொடர் ஹேக்கத்தான்களை நடத்த விரும்புகிறோம். பொதுப் பிரச்னைகளைத் தீர்க்க இளைஞர்களைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம் என்று அறிவித்துள்ளார். கடந்த 23ஆம் தேதி சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் வெற்றித்தடம் பதித்தது குறிப்பிடத்தக்கது.