தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக கேள்விகளுக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார். அதிலும் குறிப்பாக பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி எடுக்க ஆரம்பித்து விட்டதால் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு விடுமுறை முன்னதாக விடுவது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.