பொதுவாகவே கணவன் மனைவி மற்றும் காதலர்கள் இணைந்து பலவிதமான போட்டோஷூட் செய்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இணையத்திலும் ஏராளனமான போட்டோக்கள் வலம் வருவது வழக்கம். ஆனால் பெண் ஆசிரியை ஒருவர் தன்னை விட வயதில் குறைந்த மாணவன் ஒருவருடன் காதல் புகைப்படம் எடுத்துள்ளார். கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள் சமீபத்தில் ஆய்வு சுற்றுலா சென்றனர். அப்போது அந்த பெண் ஆசிரியை பத்தாவது மாணவனுடன் நெருக்கமாக படம் எடுத்துள்ளார். இது வைரலானதையடுத்து, அவர் உயர் அதிகாரிகளால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.