தமிழகத்தில் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்குவதற்கு பிரத்தியேக கைபேசி எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது.

இதனால் அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கே தேவையான நிவாரண பொருட்களை வழங்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுடைய விவரங்களை தெரிவிக்கலாம் எனவும் இதற்காக பிரத்யேகமாக 7397766651 என்ற எண்ணை பயன்படுத்தலாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.