கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் நிலச்சரிவால் சாலைகள் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், ஆஷிஷ் சிங்கா- ஷிவானி தாக்கூர் ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் மழையால் ஷிவானியின் ஊருக்கு ஆஷிஷ் செல்ல முடியாததால், இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று  வீடியோ காலில் திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது.