பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் நேற்று மாலை நாட்டிற்காக வென்ற பதக்கங்களை வீசப்போவதாக கங்கை நதிக்கரைக்கு செல்ல முடிவு பண்ணி,  மல்யுத்த வீரர், மல்யுத்த வீராங்கனைகள் நேற்று  ஹரித்துவாரில் உள்ள கங்கையில், தங்கள் ஒலிம்பிக் மெடல்களை வீசுவதற்காக அங்கே வந்தனர்.

பின் தாங்கள் கஷ்டப்பட்டு ஜெயித்த, மெடல்களை வீசப்போகிறோமே என்ற வேதனையில், மெடல்களை பார்த்தபடி கண்ணீர் வடித்தனர்.அதன்பின், அது தடுத்து நிறுத்தப்பட்டது. நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள் விவகாரத்தில், உடனடி நடவடிக்கை எடுக்க தவறுவது ஏன் என்று இணையவாசிகள் #rip_for_Indian_democracy என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.