தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் அண்மையில் படப்பிடிப்பிற்காக மலேசியா சென்று இருந்தபோது தன்னை சந்திக்க வந்த ரசிகர்களுடன் நேரம் செலவிட்டு செல்பி எடுத்துக்கொண்டாராம். இந்நிலையில் விஜய் சேதுபதியை சந்திக்க வந்த ஒரு ரசிகை சோகமாக இருந்ததை பார்த்து அவருக்கு என்ன பிரச்சனை என கேட்டாராம்.

அதற்கு ரசிகை கூறியதாவது, தான் இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக மலேசியா வந்ததாகவும், அந்நிறுவனத்தினர் பேசிய சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்ட நிலையில் தற்போது இந்தியாவுக்கு திரும்ப போக முடியாமல் தவிப்பதாகவும் விஜய் சேதுபதியிடம் தெரிவித்திருக்கிறார். பின் அவருக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்த விஜய் சேதுபதி அதிகாரிகளுடன் பேசி தன் சொந்த செலவில் அந்த பெண் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்துள்ளார். விஜய் சேதுபதியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.