சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் மக்களை மேலும் வாட்டி வதைக்கும் வகையில் ஆவின் பால் விலையை மீண்டுமாக திமுக அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, ஆவின் பால் விலையை மறைமுகமாக திமுக அரசு உயர்த்தி உள்ளதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.

ஆவின் பால் விலையை ரூபாய்.3 குறைத்துவிட்டு, அதை ஈடு செய்ய ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு மொத்த விற்பனையாளர்களுக்கு 1 லிட்டருக்கு 40 பைசா உயர்த்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அது கிடைக்கும்போது கூடுதலாக ரூபாய்.2 செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஓபிஎஸ் கூறினார்.