தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது உடல் சென்னை கோயம்புத்தூரில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் அஞ்சலி செலுத்தி வரும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத்தை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் மறைந்தும் மக்கள் பசியாற அன்னதானம் வழங்குகிறார் கேப்டன் என கண்ணீர் மல்க கூறி வருகிறார்கள்.