தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்துள்ளது. அதன்படி நெல்லையிலிருந்து சென்னைக்கு 2900 முதல் 3500 ரூபாய் வரையும், மதுரையில் இருந்து சென்னைக்கு 1700 முதல் 2500 ரூபாய் வரையும் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.