விஜய் தொலைக்காட்சியில் ‘ரெட்டைவால் குருவி’, ‘சின்னத்தம்பி’ ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவ்னி. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரதீப் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், பிரதீப் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், சோகத்தில் ஆழ்ந்தார் பாவ்னி. பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற இவர் அமீர் என்பவரை காதலித்து வந்தார்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் எப்போது திருமணம் கொள்வார் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், திருமண தேதியை தற்போது அவர் அறிவித்திருக்கிறார் . இந்த வருடம் நவம்பர் மாதம் இவர்களின் திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.