ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நறுக்கூர் கிராமத்தை சேர்ந்த ரமணா (40), சுமலதா (36)தம்பதியினர் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இருவரையும் குடும்பத்தினர் சென்னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

சென்னையில் இருந்து நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரமணா கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கணவரை இறுதிச் சடங்கு நடந்த சில மணி நேரத்தில் மனைவி சுமலதாவும் உயிரிழந்தார். இந்த சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.