டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார். இது குறித்து பலர் அதிகார மாற்றத்திற்காக செங்கோல் கொடுக்கப்பட்டது என தெரிவித்தனர். மேலும் சிலர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் என் ராம் வெளியிட்டுள்ள செய்தியில், செங்கோல் பற்றி பல கட்டுக்கதைகள் வெளிவந்துள்ளது. இதனை fact check செய்துள்ளோம். டெல்லியில் மவுண்ட்பேட்டன் நேருவை சந்தித்து உண்மை. அந்த கால கட்டத்தில் அதிகார மாற்றத்திற்காக செங்கோல் கொடுத்ததாக சொல்வது கட்டுக்கதை” என தெரிவித்துள்ளார்.