இந்தியரான தர்மேஷ் படேல்(42) அமெரிக்காவில் மருத்துவராக இருந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்ற போது மலை உச்சியில் இருந்து காரோடு அவர்களை தள்ளினார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவருக்கு உளவியல் கோளாறு இருப்பதும் குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்கள் என்ற பயத்தில் இவ்வாறு செய்ததும் தெரிய வந்தது. இவர் மீது பதியப்பட்டுள்ள கொலை முயற்சி வழக்குகளில் அவர் குற்றவாளி என இதுவரை நிரூபிக்கப்படவில்லை. வருகின்ற மே இரண்டாம் தேதி வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற உள்ளது.