திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவந்திபுரம் சத்தியமூர்த்தி தெருவில் வைகுண்ட மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனசிங்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மஞ்சு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சு பாரதி கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மனைவி இறந்ததிலிருந்து மன உளைச்சலில் இருந்த தனசிங் தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனசிங்கை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனசிங் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.