கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜயகுமார் (48) என்பவர் பன்றி பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நேவிஸ் (45) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர்களது மகன் பிபின் (21) சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

மனைவி இறந்த துக்கத்தில் இருந்த விஜயகுமார் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த போலீசார் நேற்று (ஏப்ரல் 12) அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.