கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தனது தங்கை சுமித்ராவை 12 வருடங்களுக்கு முன்பு மரசனி கிராமத்தில் வசித்து வந்த குருமூர்த்தி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்து தம்பதிகள் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது குடும்பத்தினர் சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். கடந்த மாதமும் தம்பதி இடையே தகராறு ஏற்பட சுமித்ரா தனது அண்ணனின் வீட்டிற்கு வந்து விட்டார். அதன் பிறகு கணவன் அழைத்தும் அவர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு முறை குருமூர்த்தி சதீஷ் வீட்டிற்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். அதன் பிறகு சதீஷ் வீட்டின் முன்பு ஏதோ ஒரு விலங்கை பலி கொடுத்து ரத்தத்தை குருமூர்த்தி தெளித்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது வீட்டிற்கு மாந்திரீகம் செய்து ரத்தத்தை தெளித்து இருப்பதாக குருமூர்த்தி மீது சதீஷ் பனகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்த காவல்துறையினர் குருமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியுடன் தகராறு…. வீட்டின் முன்பு ரத்தம்….. மாந்திரீகத்தால் சிக்கிய கணவர்…..!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more