கர்நாடக மாநிலம் ஹனூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி குமார் என்பவருடைய மனைவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மனைவியின் இந்த செயலை விரும்பாத குமார் ரீல்ஸ் வீடியோ எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று பலமுறை கூறிவந்துள்ளார். இந்த விவகாரத்தால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மனைவியின் ரீல்ஸ் வீடியோவை பார்த்த மற்றவர்கள் கிண்டல் செய்ததால் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்தகுமார் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.