காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் இன்று முடக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், மோடி அவர்களே பயப்பட வேண்டாம், சர்வாதிகாரத்திற்கு நாங்கள் ஒருபோதும் தலைகுனிய மாட்டோம். காங்கிரஸ் கட்சி பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி கிடையாது, மக்களின் வலிமையால் இயங்கும் கட்சி. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் ஜனநாயகத்தை காப்பாற்ற கடைசிவரை போராடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்