நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவி தொடர்ந்து தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் எதிரான கருத்துக்களை பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட மார்க்சிய தத்துவவாதிகள் மற்றும் தலைவர்களை குறித்து உண்மைக்கு மாறான பேச்சுக்களை பொதுவெளியில் பேசி வருகிறார். அவரின் இந்த செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு கவர்னர் ஆர்.என் ரவியை திரும்ப பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.