மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஜனவரி மாதம் முன் தேதியிட்டு 4 சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது வரை ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி உயர்வு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு வழங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்த நிலையில் மூன்று சதவீதம் மட்டுமே அகலவிலைப்படி உயர்வு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கட்டாயமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஊதிய குழு அடிப்படையில் அதன் பலன்கள் வழங்கப்படும் நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிய ஊதிய குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.