இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி மாதத்திற்கான அளவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அகல விலைப்படி உயர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது 46 சதவீதத்தின் அடிப்படையில் அகலவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் நான்கு சதவீதம் உயர்வு வழங்கப்பட்டு 50 சதவீதம் வழங்கப்படும் என தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த மாதம் இறுதிக்குள் அகல விலை படிக்கான அறிவிப்பை வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் கூடுதலாக 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவார்கள். அதாவது குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாய் பெரும் ஊழியர்கள் கூடுதலாக ஒன்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டால் அடிப்படை சம்பளமாக 27 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.