
இங்கிலாந்தை சேர்ந்த ஆலிசன்(54) என்ற பெண் ஒருவர் பாங்காகிற்க்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று முன்தினம் சுரத் தனி மாகாணம் சோ பஹொ என்ற கடற்கரைக்கு குளிப்பதற்காக இரவு தனியாக சென்ற ஆலிசன் மீண்டும் திரும்பி வரவில்லை. மறுநாள் காலை கடற்கரை ஓரத்தில் ஆலிசன் சடலமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆலிசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போது ஆலிசன் குளிக்க செல்வதற்கு முன்பு அதிகமான மது போதையில் இருந்ததும், இதனால் கடல் அலையில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.
எனினும் ஆலிசன் மரணத்திற்கு வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.