தமிழகத்தில் சமீபகாலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்கொலை மரணங்கள் குறைக்கும் விதமாக தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்டிக்கடைகள் முதல் அனைத்து கடைகளிலும் மிக எளிதாக விற்பனைக்கு வரும் எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை செய்ய வழிவகை செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 3% மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலி பேஸ்ட் விற்க தடை விதித்து ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். கடைகளில் எலி பேஸ்ட் விற்பது குறித்து தெரியவந்தால் புகார் தெரிவிக்கலாம் முன்னதாக எதிர்வினை மருந்துகள் இல்லாததால் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இதற்கு தடை விதித்துள்ளன.