பதிவுத் துறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய சேவைக் கட்டணம் ஜூலை 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரசீது ஆவணத்திற்கு பதிவுக் கட்டணம் 20இல் இருந்து 200ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல 20 இனங்களுக்கான கட்டண வீதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. செட்டில்மண்ட் ஆவணப் பதிவுக் கட்டணம் 4,000இல் இருந்து 10,000., அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் 25,000இல் இருந்து 40,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரசீது ஆவண பதிவு – 200

குடும்ப நபர்களுக்கு செட்டில்மண்ட் விடுதலை ஆவணம் – 10,000

அதிகபட்ச முத்திரை தீர்வை – 40,000

தனிமனை பதிவு கட்டணம் – 1,000

அதிகார ஆவணம் – 10,000