மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியாவை பல மணி நேர விசாரணைக்கு பின் சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மணிஷ் சிசோடியாவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் விமர்சித்து உள்ளார்.

மணிஷ் சிசோடியா விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனவும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில் மணீஷ் சிசோடியாவின் கைது நடவடிக்கையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.