டெல்லி உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்தியா மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்று இடங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாட்டை நினையுங்கள் மதத்தை நினைக்காதீர்கள் என்று கூறினார்.

அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்கப் முயற்சிக்கிறீர்கள். நாட்டை கொதிப்பான நிலையில் வைத்திருக்க விரும்புகிறீர்களா. நாட்டை மட்டும் மதத்தை அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினார். மேலும் அஸ்வினி உபாத்தியா தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.