மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தெயி சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.

இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் தங்களை அந்த கும்பலிடம் போலீஸ் தான் விட்டு சென்றது என்றும் தங்கள் ஆடைகளை களையும் போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்ததாகவும் தங்களுக்கு உதவவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தவுபால் மாவட்டத்தை சேர்ந்த ஹெராதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.