இன்று முதல் ஆகஸ்ட் 11 வரை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற இருந்த நிலையில் மணிப்பூரில் இரண்டு பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துவரப்பட்ட காணொளி சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து இந்த சம்பவத்திற்கு மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர் கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் மதியம் 2 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டத்தொடர் நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு கூடிய அவையிலும் எதிர்க்கட்சிகள்  கோஷங்கள் எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தியதால் நாளை காலை 11 மணி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.