மணிப்பூரில் மே  3 ஆம் தேதி இட ஒதுக்கீடு தொடர்பாக ஆரம்பித்த பிரச்சனை இன்று வரை வன்முறையாக தொடர்கிறது. இந்நிலையில் மே 4ஆம் தேதி மாநிலத்தில் இரண்டு பெண்களை வன்கொடுமை செய்து நிர்வாண ஊர்வலமாக அழைத்து வந்த காணொளி நேற்று மாலை வெளியானது.

இது நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மணிப்பூர் பெண்களிடம் கொடூரமாக நடந்தவர்களை தூக்கிலிடுங்கள் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.